பிரதமர் மக்களை திசைதிருப்புகிறார்: ராகுல் குற்றச்சாட்டு| Dinamalar

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

புதுடில்லி: திசை திருப்பும் அரசியலில் நிபுணத்துவம் பெற்றவர் பிரதமர் என்றும், அவர் மக்களை திசை திருப்புவதாக காங்கிரஸ் எம்.பி., ராகுல் குற்றம்சாட்டி உள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளதாவது: திசை திருப்பும் அரசியலில் நிபுணத்துவம் பெற்ற பிரதமரால் இந்த பேரழிவுகளை என்றும் மறைக்க முடியாது.
டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு 78.
எல்ஐசி., -ன் மதிப்பு 17 பில்லியன் டாலர் குறைந்து போனது.
மொத்த வியாபார விலை பணவீக்கம் 30 வருடங்களில் இல்லாத வகையில் உயர்ந்துள்ளது.
வேலையில்லா திண்டாட்டம் என்றும் இல்லாத வகையில் உயர்வு.
இதுவரை இல்லாத அளவுக்கு மிகப் பெரிய டி.எச்.எப்.எல் வங்கியில் மோசடி நடந்துள்ளது.

latest tamil news

மக்கள் இங்கு தவித்துக் கொண்டிருக்கும் போது பிரதமர் மக்களை திசை திருப்பிக் கொண்டு இருக்கிறார். இவ்வாறு அந்த அறிக்கையில் ராகுல் கூறியுள்ளார்.

Advertisement

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.