மித்தெனிய எரிபொருள் நிரப்பு நிலையத்திற்கு அருகாமையில் சம்பவம்

மித்தெனிய எரிபொருள் நிரப்பு நிலையத்திற்கு அருகாமையில் இன்று காலை குழப்பமான சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.

இதனால் ஒருவர் உயிரிழந்துள்ளார். அவர் எம்பிலியப்பிட்டிய பிரதேசத்தை வசிப்பிடமாக கொண்ட 45 வயது நிரம்பிய இரு பிள்ளைகளின் தந்தை ஆவார்.

மித்தெனிய பொலிஸார் சம்பவம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

எரிபொருளுக்காக வரிசையில் நிற்பவர்கள் மத்தியில் உணர்ச்சியை தூண்டும் வகையில் திட்டமிட்டு சிலர் குழப்பங்களை விளைப்பிப்பதாக செய்திகள் வெளிவந்துள்ளன. இதுகுறித்து பொது மக்கள் அவதானத்துடன் இருக்கும்படி பொலிஸார் கேட்டுக்கொண்டுள்ளனர்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.