இந்தியா – லீசெஸ்டர்ஷைர் அணிகளுக்கு இடையிலான பயிற்சி ஆட்டம் டிரா..!!

லீசெஸ்டர்,

இங்கிலாந்துக்கு சென்றுள்ள இந்திய கிரிக்கெட் அந்த அணிக்கு எதிரான டெஸ்ட் தொடருக்கு முன்னதாக அணி லீசெஸ்டர்ஷைர் அணிக்கு எதிராக 4 நாள் பயிற்சி ஆட்டத்தில் விளையாடி வருகிறது. இதில் முதல் இன்னிங்சில் இந்திய அணி 246 ரன்கள் எடுத்த போது டிக்ளேர் செய்தது.

பின்னர் களமிறங்கிய லீசெஸ்டர்ஷைர் அணி 244 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. 2 ரன் முன்னிலையுடன் 2-வது இன்னிங்சை ஆடிய இந்தியா 9 விக்கெட்டுக்கு 364 ரன்கள் எடுத்து டிக்ளேர் செய்தது. அரைசதம் கடந்த முன்னாள் கேப்டன் விராட் கோலி 67 ரன்கள் (98 பந்து, 5 பவுண்டரி, 2 சிக்சர்) எடுத்த நிலையில் பும்ராவின் பந்து வீச்சில் கேட்ச் ஆனார். ரவீந்திர ஜடேஜாவும் (56 ரன்) அரைசதம் அடித்தார்.

இன்று நடந்த கடைசி நாள் போட்டியில் லீசெஸ்டர்ஷைர் அணி 4 விக்கெட் இழப்பிற்கு 219 ரன்கள் எடுத்திருந்த போது போட்டி டிராவானது. இந்தியா – இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான டெஸ்ட் போட்டி ஜூலை 1 ஆம் தேதி தொடங்குகிறது.


Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.