30 அரசியல் கட்சிகளின் விண்ணப்பங்கள் தேர்தல் திணைக்களத்தினால் நிராகரிப்பு

பதிவு செய்வதற்காக விண்ணப்பித்த 30 அரசியல் கட்சிகளின் விண்ணப்பங்கள் தேர்தல் திணைக்களத்தினால் நிராகரிக்கப்பட்டுள்ளன.

தேவையான அடிப்படைத் தகுதியைப் பூர்த்தி செய்யாததன் காரணமாக பதிவு செய்வதற்காக விண்ணப்பித்த 70 கட்சிகளின் 30 விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது.

எஞ்சிய 40 அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகளுக்கான நேர்முகப் பரீட்சை ,அடுத்த மாதம் 4ம் திகதி ஆரம்பமாகவுள்ளது. இந்தக் கட்சிகள் கடந்த 4 வருட காலப்பகுதியில் செயற்பாட்டு அரசியலில் ஈடுபட்டுள்ளமை உறுதி செய்யப்பட வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.