சொந்த வீட்டிலேயே ஆட்டைய போட்ட 9 ம் வகுப்பு படிக்கும் மகன் : 52 சவரன் நகை அபேஸ்

துரையில் வீட்டிலிருந்த 52 சவரன் நகை காணாமால் போனதாக ஒரு தம்பதி போலீசில் புகாரளித்த நிலையில், அவர்களது 13 வயது மகனே நகைகளை திருடி விற்று நண்பர்களுடன் ஊர் சுற்றியது விசாரணையில் தெரியவந்துள்ளது.

நாகமலை புதுக்கோட்டையைச் சேர்ந்த தம்பதியர், சிறிய ஹோட்டல் ஒன்றை நடத்தி வருகின்றனர். இந்த தம்பதி வீட்டிலிருந்த நகைகள் காணாமல் போனதாக கொடுத்த புகாரின் பேரில் போலீசார் விசாரணையை தீவிரப்படுத்தினர்.

அப்போது 9ம் வகுப்பு படிக்கும் இந்த தம்பதியின் மகனே, முழு ஆண்டு தேர்வு விடுமுறை நாட்களில் வீட்டில் இருந்த நகைகளை சிறிது சிறிதாக திருடி விற்று நண்பர்களுடன் சேர்ந்து ஊர் சுற்றியது அம்பலமானது. 

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.