அதிமுகவில் மீண்டும் வெடிக்கும் பூகம்பம்.. ஒன்றுகூடும் நிர்வாகிகள்.. நடக்கப்போகும் மாற்றம்.?

அதிமுகவில் ஒற்றை தலைமை விவகாரம் பூதாகரமாக வெடித்து வரும் நிலையில், எடப்பாடி பழனிசாமி அணியினர் அதிமுகவிலிருந்து பன்னீர்செல்வத்தை புறக்கணிக்கும் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். 

அதிமுகவினர் அதிகாரப்பூர்வ நாளேடான நமது அம்மா பத்திரிகையின் நிறுவனர் என்ற பொறுப்பிலிருந்து ஓ பன்னீர்செல்வம் பெயர் நீக்கப்பட்டுள்ளது. இந்த பரபரப்பான சூழ்நிலையில் அதிமுக கழக நிர்வாகிகள் கூட்டம் இன்று நடைபெறுவதாக அறிவித்துள்ளனர். 

இதுகுறித்து, அதிமுக தலைமை கழகம் என்ற பெயரில் அதிமுக தலைமை நிலைய செயலாளர் வெளியிட்டுள்ள அறிக்கையில், அதிமுக தலைமை கழக நிர்வாகிகள் கேட்டுக் கொண்டதற்கு இணங்க 27ஆம் தேதி திங்கள்கிழமை காலை 10 மணிக்கு தலைமை அலுவலகத்தில் புரட்சித்தலைவர் எம்ஜிஆர் மாளிகையில் கூட்ட அரங்கில், தலைமை கழக நிர்வாகிகள் கூட்டம் நடைபெற உள்ளது. இந்த கூட்டத்தில் தலைமை கழக நிர்வாகிகள் அனைவரும் கலந்து கொள்ளுமாறு அன்போடு கேட்டுக் கொள்கிறேன் எனத் தெரிவித்துள்ளார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.