கர்நாடகத்தில் 16 ஐ.பி.எஸ். அதிகாரிகள் திடீர் பணி இடமாற்றம்-மாநில அரசு உத்தரவு

பெங்களூரு:

கர்நாடக அரசு பிறப்பித்து உள்ள உத்தரவில் கூறப்பட்டு இருப்பதாவது:-

சஞ்சீவ் எம்.பாட்டீல்

* பெங்களூரு தென்கிழக்கு மண்டல துணை போலீஸ் கமிஷனராக பணியாற்றி

வந்த ஜோஷி ஸ்ரீநாத் மகாதேவ், கர்நாடக லோக் அயுக்தா போலீஸ் சூப்பிரண்டாக பணி இடமாற்றம் செய்யப்பட்டு உள்ளார்.

* பெங்களூரு கிழக்கு மண்டல துணை போலீஸ் கமிஷனராக (போக்குவரத்து) பணியாற்றி வரும் சாந்தராஜூ, பெஸ்காம் போலீஸ் சூப்பிரண்டாக இனி பணி செய்வார்.

* காத்திருப்போர் பட்டியலில் இருந்த சி.கே.பாபா தென்கிழக்கு மண்டல துணை போலீஸ் கமிஷனராக நியமிக்கப்பட்டு உள்ளார்.

* பெங்களூரு மேற்கு மண்டல துணை போலீஸ் கமிஷனராக பணி செய்து வந்த சஞ்சீவ் எம்.பாட்டீல், பெலகாவி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டாக இனி தனது பணியை மேற்கொள்வார்.

* பெங்களூரு மத்திய மண்டல ஊழல் தடுப்பு படை போலீஸ் சூப்பிரண்டாக பணியாற்றி வந்த கலா கிருஷ்ணசாமி, கிழக்கு மண்டல துணை போலீஸ் கமிஷனராக (போக்குவரத்து) இனி பணி செய்வார்.

* பெங்களூரு தெற்கு மண்டல துணை போலீஸ் கமிஷனராக பணியாற்றி வந்த ஹரீஷ் பாண்டே, பெங்களூரு ஊழல் தடுப்பு படை போலீஸ் சூப்பிரண்டாக நியமிக்கப்பட்டு உள்ளார்.

* பெலகாவி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டாக பணியாற்றி வந்த லட்சுமண் நிம்பரகி, பெங்களூரு மேற்கு மண்டல துணை போலீஸ் கமிஷனராக பணி இடமாற்றம் செய்யப்பட்டு உள்ளார்.

* பெங்களூருவில் குற்ற வழக்கு விசாரணை பிரிவு போலீஸ் சூப்பிரண்டாக பணியாற்றி வந்த நாகேஷ், சிக்பள்ளாப்பூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டாக பணி இடமாற்றம் செய்யப்பட்டு உள்ளார்.

ஷோபா ராணி மாற்றம்

* பாகல்கோட்டை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டாக பணியாற்றி வந்த லோகேஷ் பரமப்பா ஜகல்சர், தார்வார் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டாக இனி பணி செய்வார்.

* ஹாசன் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சீனிவாஸ் கவுடா, பெங்களூரு மத்திய மண்டல துணை போலீஸ் கமிஷனராக நியமிக்கப்பட்டு உள்ளார்.

* சிக்பள்ளாப்பூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு மிதுன்குமார், பெங்களூரு குற்ற வழக்கு விசாரணை பிரிவு போலீஸ் சூப்பிரண்டாக இனி பணி செய்வார்.

* தார்வார் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு கிருஷ்ணகாந்த், பெங்களூரு தெற்கு மண்டல துணை போலீஸ் கமிஷனராக மாற்றப்பட்டு உள்ளார்.

* தட்சிண கன்னடா மாவட்டம் மங்களூருவில் சட்டம் மற்றும் ஒழுங்கு துணை போலீஸ் கமிஷனராக பணி செய்து வந்த ஹரிராம் சங்கர், ஹாசன் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டாக இனி செயல்படுவார்.

* தாவணகெரேயில் ஊழல் தடுப்பு படையில் போலீஸ் சூப்பிரண்டாக பணியாற்றிய ஜெயபிரகாஷ், பாகல்கோட்டை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டாக நியமிக்கப்பட்டு உள்ளார்.

* பெங்களூருவில் பெஸ்காம் போலீஸ் சூப்பிரண்டாக பணி செய்து வந்த ஷோபா ராணி, பெங்களூருவில் ஊழல் தடுப்பு படை போலீஸ் சூப்பிரண்டாக இனி தனது பணியை தொடர்வார்.

* தட்சிண கன்னடா மாவட்டம் பண்ட்வால் உதவி மண்டலத்தில் உதவி போலீஸ் சூப்பிரண்டு சிவன்சு ராஜ்புத், பீதர் மாவட்டம் உம்னாபாத் உதவி மண்டல உதவி போலீஸ் சூப்பிரண்டாக இனி பணி செய்வார்.

இவ்வாறு அந்த உத்தரவில் கூறப்பட்டு உள்ளது.


Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.