பெற்ற குழந்தையை கொலை செய்துஐஸ் பெட்டியில் வைத்த தாய் கைது| Dinamalar

டெட்ராய்ட்-அமெரிக்காவில், பெற்ற குழந்தையை கொலை செய்து, ‘ஐஸ்’ பெட்டியில் வைத்திருந்த தாய் கைது செய்யப்பட்டுள்ளார்.


திடீர் சோதனை

அமெரிக்காவின் டெட்ராய்ட் நகரைச் சேர்ந்தவர் அசுராதி பிரான்ஸ். இவரது வீட்டில், குழந்தைகள் கண்காணிப்பு அமைப்பினர் திடீர் சோதனை நடத்தினர். அப்போது, பாதாள அறையில் இருந்த ஐஸ் பெட்டியில், அசுராதி பிரான்சின் 3 வயது குழந்தை சேஸ் ஆலன், உறைந்த நிலையில் இறந்து கிடந்ததை கண்டுபிடித்தனர். இதையடுத்து, அசுராதி பிரான்சை போலீசார் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். அப்போது நீதிபதி, ‘நம் நாட்டில் துப்பாக்கியால் மட்டுமின்றி, வீட்டில் உள்ளவர்களாலும் குழந்தைகளுக்கு ஆபத்து உள்ளது கவலை அளிக்கிறது’ எனக் கூறி, விசாரணையை தள்ளி வைத்தார். இதற்கிடையே, அசுராதியின் தாய் டோனி ஹெய்ன்ஸ் கூறியதாவது:கண்பார்வையற்ற சேஸ் ஆலன் மீது, எனக்கு தனி பாசம் உண்டு. சமீபத்தில், அசுராதி வீட்டிற்கு சென்ற போது, சேஸ் ஆலனை காணவில்லை. அவன், தன் தாத்தாவின் தோழி வீட்டில் வளர்வதாக அசுராதி கூறினார். ஒருநாள், சிறையில் இருந்து விடுதலையான சேஸ் ஆலன் தாத்தாவை சந்தித்தேன். அப்போது அவர், சேஸ் ஆலன் தன் தோழி வீட்டில் இல்லை என கூறினார்.

சந்தேகம்
எனக்கு அசுராதி மீது சந்தேகம் ஏற்பட்டு, குழந்தைகள் கண்காணிப்பு அமைப்பிடம் தெரிவித்தேன். அவர்கள் சோதனை செய்தபோது தான், சேஸ் ஆலன் கொல்லப்பட்டது தெரியவந்தது.இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.