சாமி தரிசனத்தின் போது ரவுடி படுகொலை மாண்டியாவில் பட்டப்பகலில் பயங்கரம்| Dinamalar

மாண்டியா : மாவட்டத்தில் இருந்து வெளியேற்றப்பட்ட பிரபல ரவுடி, மாண்டியாவுக்கு நேற்று வந்து சிவன் கோவிலில் சாமி தரிசனம் செய்து கொண்டிருக்கும் போதே மர்ம கும்பல் பயங்கரமாக தாக்கி கொலை செய்தது.

மாண்டியா மாவட்டம், கே.ஆர்.பேட் சேர்ந்தவர் அருண் என்ற அல்லு, 38. கொலை, கொள்ளை, மிரட்டல் என பல்வேறு குற்றச்சாட்டுகளில் தொடர்ந்து ஈடுபட்டு வந்ததால், அவரது பெயர் ரவுடி பட்டியலில் சேர்க்கப்பட்டது.பலமுறை சிறை சென்றவர். சிறையில் இருந்து கொண்டே அதிகாரிகள் உதவியுடன், தனக்கு பணம் கொடுக்க மறுத்த ஒரு தொழிலதிபரை கடத்தினார்.

இரண்டாம் நிலை அரசியல் பிரமுகர்களிடம் தொடர்ந்து பணம் பெற்று வந்தார். இதனால் மாவட்ட எல்லையில் இருந்து வெளியேற்றப்பட்டார். மாண்டியாவுக்குள் நுழைய தடை விதிக்கப்பட்டது.ஆனாலும், கே.ஆர்.பேட்டுக்கு நேற்று காலை வந்தார். இதையறிந்த ஐந்து பேர் கொண்ட மர்ம கும்பல், அவரை பின் தொடர்ந்தனர்.சாமி தரிசனம் செய்வதற்காக நகரின் சிவன் கோவிலுக்கு நேற்று காலை சென்றார். அப்போது கோவிலுக்குள் புகுந்து, பயங்கர ஆயுதங்களால் ரவுடியை பயங்கரமாக தாக்கி கொலை செய்யப்பட்டார்.

கண்ணிமைக்கும் நேரத்தில் கும்பல் தப்பியோடி விட்டது. இச்சம்பவம் நகரையே உலுக்கியது. சுற்று வட்டார பகுதிகளில் இருந்து திரளானோர் கூடினர். பட்டப்பகலில் ரவுடி கொலை செய்யப்பட்ட சம்பவம் மக்களை பெரும் அதிர்ச்சி அடைய செய்தது.உயர் போலீஸ் அதிகாரிகள் சம்பவ இடத்துக்கு வந்து, விசாரித்தனர். முன் விரோதம் காரணமாக கொலை செய்திருக்கலாம் என்று போலீசார் சந்தேகிக்கின்றனர்.கே.ஆர்.பேட் டவுன் போலீசார் விசாரிக்கின்றனர்.

Advertisement

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.