அதிமுக பொதுக்குழு தொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் ஓபிஎஸ் கேவியட் மனு

புதுடெல்லி: அதிமுக பொதுக்குழுவில், ஏற்கெனவே தீர்மானிக்கப்பட்ட 23 தீர்மானங்கள் தவிர்த்து புதிதாக வேறு தீர்மானம் நிறைவேற்றவோ, கட்சி விதிகளில் திருத்தம் செய்யவோ கூடாது என்று சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.

இதைத் தொடர்ந்து, கடந்த 23-ம்தேதி நடந்த அதிமுக பொதுக்குழுவில் அந்த 23 தீர்மானங்களையும் பொதுக்குழு உறுப்பினர்கள் நிராகரித்ததாக அறிவிக்கப்பட்டது.

இந்நிலையில், இதுதொடர்பாக அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் சார்பில் உச்ச நீதிமன்றத்தில் கேவியட் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

அவரதுசார்பில் வழக்கறிஞர் கவுதம் சிவசங்கர் தாக்கல் செய்த மனுவில், ‘‘அதிமுக பொதுக்குழு தொடர்பாகசென்னை உயர் நீதிமன்றம் பிறப்பித்துள்ள உத்தரவுப்படி, ஏற்கெனவே தீர்மானிக்கப்பட்ட 23 தீர்மானங்கள் தவிர்த்து வேறு எந்ததீர்மானமும் நிறைவேற்றக் கூடாது.

எனவே, சென்னை உயர் நீதிமன்றத்தின் அந்த தீர்ப்பை எதிர்த்து யாரேனும் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தால், எங்கள்தரப்பு வாதத்தை கேட்காமல் எந்த உத்தரவும் பிறப்பிக்கக்கூடாது’’ என்று அதில் கோரப்பட்டுள்ளது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.