மகாராஷ்டிராவில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 9 பேர் உயிரிழந்த வழக்கில் திடீர் திருப்பம்

மகாராஷ்டிராவில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 9 பேர் உயிரிழந்த வழக்கில் திடீர் திருப்பமாக, மந்திரவாதி உட்பட 2 பேரால் விஷம் வைத்து கொல்லப்பட்டது தெரியவந்துள்ளது.

சாங்கிலி மாவட்டத்தைச் சேர்ந்த கால்நடை மருத்துவரான மாணிக் எல்லப்பா, அவரது சகோதரர போபட் எல்லப்பா ஆகிய 9 பேர் வீட்டில் இருந்து இறந்த நிலையில் பிணமாக மீட்கப்பட்டனர். முதற்கட்ட விசாரணையில், கடன் தொல்லையால் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டதாக போலீசார் தெரிவித்தனர்.

மேலும், கடன் தொல்லை கொடுத்த 25 பேர் மீது வழக்குப்பதிவு செய்த போலீசார், 13 பேரை கைது செய்திருந்தனர். இந்நிலையில் தீவிர விசாரணையில், மந்திரவாதியான தீரஜ் சந்திரகாந்த் அவரது டிரைவர் அப்பாஸ் முகமது அலி பகவான் ஆகிய 2 பேரால் விஷம் வைத்து கொலை செய்யப்பட்டது தெரியவந்துள்ளது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.