மகாவீரர் சிலை பத்திரமாக மீட்கப்பட்டு அருங்காட்சியகத்திற்கு அனுப்பி வைப்பு

விருதுநகர் மாவட்டம் காரியாபட்டி அருகே கண்டெடுக்கப்பட்ட மகாவீரர் சிலை பத்திரமாக மீட்கப்பட்டு விருதுநகர் அருங்காட்சியகத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டது.

புதுப்பட்டி காட்டுப் பகுதியில் தொல்லியல் பட்டப்படிப்பு மாணவர்கள் நேற்று மேற்புற கள ஆய்வு மேற்கொண்ட போது  3 அடி உயரம் இரண்டே கால் அடி அகலம் கொண்ட சிலை கிடைத்தது.

இந்த சிலை பத்தாம் நூற்றாண்டைச் சேர்ந்தது என்பதும் சமணர் சமயத்தின் 24 ஆவது தீர்த்தங்கரான மகாவீரர் சிலை என்பதும் தொல்லியல் ஆய்வாளர்களால் உறுதி செய்யப்பட்டது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.