சல்மான் கானுக்கு ‘ஹார்ட் எமோஜி’ பறக்க விட்ட சமந்தா: காரணம் இதுதான்!

அல்லு அர்ஜூன் நடிப்பில் வெளியாகி பெரிய வெற்றி பெற்ற புஷ்பா படத்தில் இடம்பெற்ற ஊ சொல்றீயா மாமா பாடல் தனக்கு மிகவும் பிடித்துள்ளது என்று நடிகர் சல்மான்கான் கூறியுள்ளார்.

தெலுங்கு சினிமாவின் முன்னணி நடிகரான அல்லு அர்ஜூன் நடிப்பில் கடந்த ஆண்டு இறுதியில் வெளியான படம் புஷ்பா. செம்மர கட்டை கடத்தலை மையமாக வைத்து திரைக்கதை அமைக்கப்பட்டிருந்த இந்த படம் 5 மொழிகளில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றிருந்தது.

மேலும் இந்த படத்தில் சமந்தாவின் அசத்தலான நடனத்தில் இடம்பெற்றிருந்த ஊ சொல்றீயா மாமா பாடல் பட்டி தொட்டி எங்கிலும் பட்டையை கிளப்பியது. வெளியான 5 மொழிகளிலுமே இந்த பாடலுக்கு ரசிகர்கள் நல்ல வரவேற்பு கொடுத்திருந்தனர். இந்நிலையில் பாலிவுட் சூப்பர் ஸ்டார் சல்மான்கான் தற்போது இந்த பாடலுக்கு புது ரசிகராக மாறியுள்ளார்

ஊ சொல்றீயா மாமா” பாடலில் சமந்தா தனது பக்குவத்தை வெளிப்படுத்தியுள்ளதாக சல்மான்கான் குறிப்பிட்டுள்ளார்.. சமீபத்தில் நடைபெற்ற ஐஐஎஃப’ஏ (IIFA) விருது வழங்கும் விழாவில். பாலிவுட் சூப்பர் ஸ்டார் சல்மான் கான் தனக்கு மிகவும் பிடித்த பாடலாக ஊ சொல்றீயா மாமா பாடலை தேர்வு செய்துள்ளார்.

ஐஐஎஃப’ஏ (IIFA) விருதுகள் 2022 நிகழ்ச்சி வரும் சனிக்கிழமையன்று கலர்ஸ சேனலில் ஒளிபரப்பாகியது. இதில் சல்மான் கான் பேசிய வீடியோ காட்சியை உடனடியாக ரசிகர்கள் சமூக ஊடகங்களில் பகிரத் தொடங்கினர், அங்கு நிகழ்ச்சியில் சல்மான் கான் தனக்கு ஒரு பாடலைத் தேர்ந்தெடுக்கும்படி கேட்கப்பட்டார். அப்போது சல்மான் “ஓ சொல்றீயா” என்று சொன்னார்.

இந்த வீடியோ காட்சி சமூகவலைதளங்களில் வைரலாக பரவிய நிலையில் இதை ரீ-ட்விட் செய்துள்ள நடிகை சமந்தா ரூத் பிரபு இதய ஈமோஜிகளுடன் பதிவிட்டுள்ளார்.

ஏற்கனவே மாதுரி தீட்சித், ரன்வீர் சிங், ஆயிஷா சிங், ரஷாமி தேசாய், உமர் ரியாஸ், திரு ஃபைசு, ஜியோர்ஜியா ஆண்ட்ரியானி, உர்ஃபி ஜாவேத் மற்றும் நேஹா கக்கர் போன்ற திரைப்பட நட்சத்திரங்கள் சமூக ஊடகங்களில் இந்த பாடல் குறித்து தங்களது கருத்துக்களை பதிவிட்டிருந்த நிலையில், அந்த வரிசையில் தற்போது சல்மான் கானும் இணைந்துள்ளார்.

இந்த பாடலில் தான் தனது உழைப்பை நினைவு கூர்ந்த சமந்தா. பாடலின் ஒரு படத்தை பகிர்ந்து, “நான் நன்றாக நடித்தேன், நான் மோசமாக நடித்தேன், நான் வேடிக்கையாக இருந்தேன், நான் தீவிரமாக இருந்தேன், நான் அரட்டை நிகழ்ச்சி தொகுப்பாளராகவும் இருந்தேன். கவர்ச்சியாக இருப்பது அடுத்த கட்ட கடின உழைப்பு…. அன்புக்கு நன்றி.” என பதிவிட்டுள்ளார்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.