திண்டுக்கல்லில் இருசக்கர வாகனம் மீது சரக்கு வாகனம் மோதிய விபத்தில் இளைஞர் உயிரிழப்பு.!

திண்டுக்கல்லில் இருசக்கர வாகனம் மீது சரக்கு வேன் மோதிய விபத்தில் இளைஞர் உயிரிழந்துள்ளார்.

திண்டுக்கல் மாவட்டம் சின்னகவுண்டனூரை சேர்ந்த மாரிமுத்து என்பவரின் மகன் கார்த்திக்(24). இவர் நேற்று இரவு கரூரில் இருந்து வீட்டிற்கு இருசக்கர வாகனத்தில் வந்து கொண்டிருந்தார்.

அப்போது வெள்ளைபாறை பகுதி அருகே எதிரே வந்த சரக்கு வேன் இருசக்கர வாகனத்தின் மீது நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானது.

இதில் தூக்கி வீசப்பட்ட கார்த்திக் பலத்த காயமடைந்த நிலையில் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்து உள்ளார்.

இதையடுத்து இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்து வந்த காவல் துறையினர் கார்த்திக்கின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இதைத்தொடர்ந்து இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.