தமிழகத்தில் இன்று 1,484 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்… சென்னையில் 632 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்…

தமிழகத்தில் இன்று மயிலாடுதுறை மாவட்டம் நீங்கலாக மற்ற 37 மாவட்டங்களில் புதிதாக கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

சென்னையில் 632 பேருக்கும், செங்கல்பட்டில் 239 பேருக்கும், திருவள்ளூரில் 79 பேருக்கும், காஞ்சிபுரத்தில் 59 பேருக்கும் கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

கோவை 70, கன்னியாகுமரி 51, திருச்சி 42, திருநெல்வேலி 32, சேலம், தூத்துக்குடி மற்றும் விருதுநகர் தலா 20, மதுரை 18, சிவகங்கை 17, ஈரோடு மற்றும் ராணிப்பேட்டை தலா 15, நீலகிரி மற்றும் திருவண்ணாமலை தலா 14, தஞ்சாவூர் மற்றும் திருப்பூர் தலா 11 பேருக்கும்

தேனி மற்றும் வேலூரில் தலா 10 பேருக்கும், நாமக்கல், விழுப்புரத்தில் தலா 9 பேர், கடலூர், பெரம்பலூர், தென்காசியில் தலா 8 பேர், நாகப்பட்டினத்தில் 7, திருவாரூர் மற்றும் கிருஷ்ணகிரியில் தலா 6 பேர், ராமநாதபுரத்தில் 4 பேர்.

கள்ளக்குறிச்சி, கரூர், புதுக்கோட்டை மற்றும் திருப்பத்தூரில் தலா 3 பேருக்கும்,

அரியலூர், தருமபுரி, மற்றும் திண்டுக்கல் ஆகிய 3 மாவட்டங்களில் தலா ஒருவருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

இன்று 22,137 பேருக்கு பரிசோதனை செய்யப்பட்டதில் 815 ஆண்கள் மற்றும் 669 பெண்கள்.என மொத்தம் 1,484 பேருக்கு கொரோனா இருப்பது கண்டறியப்பட்டது,

736 பேர் இன்று குணமடைந்த நிலையில் 8970 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.