கஞ்சா விற்பனையில் ஈடுபட்டவர்களின் ரூ.5.50 கோடி மதிப்பு சொத்துக்கள் முடக்கம்

கஞ்சா விற்பனையில் ஈடுபட்டவர்களின் சுமார் 5 கோடியே 50 லட்ச ரூபாய் மதிப்புள்ள அசையும் மற்றும் அசையா சொத்துக்கள் முடக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து தென்மண்டல ஐஜி விடுத்த அறிக்கையில், கஞ்சா விற்பனை தொடர்பாக, மதுரையில் காளை, அவரது மனைவி உள்ளிட்ட 3 பேர் கைது செய்யப்பட்டதாகவும், அவர்களின் குடும்பங்களுக்கு சொந்தமான சொத்துக்கள் முடக்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டது.

கஞ்சா வியாபாரிகள் மற்றும் கடத்துவோர் மட்டுமின்றி அவர்களது உறவினர்களின் சொத்துக்களும் முடக்கப்படும் என காவல்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.