போலீஸ் ஸ்டேசனில் எலி வேட்டைக்கு பூனைகளை வளர்க்கும் போலீசார்| Dinamalar

பெங்களுரூ: கர்நாடகாவில் போலீஸ் ஸ்டேசன் ஒன்றில் எலிகளின் தொல்லை தாங்க முடியாமல் தவித்த போலீசார், பூனைகளை ஸ்டேசனில் வளர்த்து வருகின்றனர்.

கர்நாடகாவின் சிக்கபலாபுரா மாவட்டம் கெளரிபிதனூரில் போலீஸ் ஸ்டேசன் ஒன்றில் எலிகள் தொல்லை நாளுக்குள் அதிகரித்து அங்குள்ள ஆவணங்கள், மற்றும் கோப்புகளை நாசம் செய்து வந்தன. எலிகளின் தொல்லையால் முக்கியமான ஆவணங்கள் சேதமடைந்ததால், பல்வேறு சிக்கல்களை போலீஸ் உயரதிகாரிகள் சந்திக்க வேண்டியிருந்தது.

இதற்கு முடிவு கட்ட நினைத்த போலீசார் எலிகளை வேட்டையாட முதற்கட்டமாக இரண்டு பூனைகள் ஸ்டேஷனில் வளர்த்து வருகின்றனர். தற்போது, எலிகள் தொல்லை இன்றி, நிம்மதியாக பணிகளை மேற்கொண்டு வருவதாக போலீசார் தெரிவித்து வருகின்றனர்.

Advertisement

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.