இந்தியன் ஓவர்சீஸ் வங்கியின் புதிய ஏ.டி.எம்., திறப்பு

கடலுார்: இந்தியன் ஓவர்சீஸ் வங்கி புதுப்பாளையம் கிளையின் புதிய ஏ.டி.எம்., மற்றும் பண வைப்பு இயந்திர மையத்தை, முதன்மை மண்டல மேலாளர் ஸ்ரீராம் திறந்து வைத்தார்.

கடலுார் கூத்தப்பாக்கம், பக்ஷி கோபாலன் செட்டியார் திருமண மண்டபம் எதிரே உள்ள விஜயலட்சுமி நகர், எண்: 871/100-பி என்ற முகவரியில், இந்தியன் ஓவர்சீஸ் வங்கி, புதுப்பாளையம் கிளையின் புதிய ஏ.டி.எம்., மற்றும் பண வைப்பு இயந்திர மையம் திறப்பு விழா நேற்று நடந்தது.புதிய ஏ.டி.எம்., மையத்தை, இந்தியன் ஓவர்சீஸ் வங்கியின் முதன்மை மண்டல மேலாளர் ஸ்ரீராம் திறந்து வைத்தார். இந்நிகழ்ச்சியில், வங்கி அதிகாரிகள், கிளை மேலாளர்கள், ஊழியர்கள் கலந்து கொண்டனர்.இது ஐ.ஓ.பி., புதுச்சேரி மண்டலத்தின் 110வது ஏ.டி.எம். மற்றும் கடலுார் மாவட்டத்தில் ஐ.ஓ.பி.,யின் 30வது ஏ.டி.எம்., ஆகும்.

Advertisement

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.