மூதாட்டியிடம் நகை பறிப்பு| Dinamalar

விருத்தாசலம்: விருத்தாசலம் பஸ் நிலையத்தில் மூதாட்டியிடம் 4 சவரன் செயின் பறித்துச் சென்ற மர்ம நபரை போலீசார் தேடி வருகின்றனர்.

பெண்ணாடம் அடுத்த கோவிலுார் கிராமத்தை சேர்ந்தவர் தங்கராசு மனைவி அய்யம்மாள், 61. இவர் நேற்று முன்தினம் விருத்தாசலம் அடுத்த வி.சாத்தமங்கலம் கிராமத்தில் உள்ள தனது மகள் வீட்டிற்கு சென்றுவிட்டு, மாலை வீட்டிற்கு புறப்பட்டார். அப்போது, விருத்தாசலம் பஸ் நிலையத்தில் கோவிலுார் செல்லும் பஸ்சிற்காக காத்திருந்தார். பஸ் வந்தவுடன் கூட்டநெரிசலில், அய்யம்மாள் பஸ்சில் ஏற முயன்றார். இதனை சாதகமாக பயன்படுத்தி, அவரது கழுத்தில் இருந்த 4 சவரன் செயினை மர்மநபர் பறித்துச் சென்றார். அதிர்ச்சி அடைந்த அவர் கூச்சலிட்டதும், அருகில் இருந்தவர்கள் மர்மநபரை பிடிக்க முயன்றனர்.ஆனால், பிடிக்க முடியவில்லை. புகாரின் பேரில், விருத்தாசலம் போலீசார் வழக்குப் பதிந்து, தப்பியோடிய மர்ம நபரை தேடி வருகின்றனர்.

Advertisement

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.