சூர்யாவை உறுப்பினராக அழைப்பு விடுத்து கெளரவித்த ஆஸ்கர்; பாராட்டிய முதல்வர் ஸ்டாலின்

ஒவ்வொரு வருடமும் ஆஸ்கர் விருது அறிவிக்கப்படும் போது அனைவரது மத்தியிலும் ஒரு எதிர்பார்ப்பை ஏற்படுத்தி விட்டுத்தான் செல்லும். ஆண்டுதோறும் ஆஸ்கர் விருதுக்கு ஒருசில இந்தியப் படங்கள் பரிந்துரை செய்யப்படும். சத்யஜித் ரே ஏ.ஆர் ரஹ்மான், உள்ளிட்ட சிலர் ஆஸ்கர் விருதுகளை வென்றிருக்கின்றனர்.

சூர்யா , கஜோல்

ஆனால் தற்போது ஆஸ்கர் உறுப்பினர் குழுவின் புதிய உறுப்பினராக நடிகர் சூர்யாவுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது ஆஸ்கர் அமைப்பு. இந்திய நடிகையான கஜோலும் ஆஸ்கர் உறுப்பினராக அழைப்பு விடுக்கப்பட்டிருக்கிறது. 2022-ம் ஆண்டிற்கான புதிய உறுப்பினர்களுக்கான அழைப்பு 397 பேருக்கு விடுக்கப்பட்டிருப்பதில் இந்தியாவைச் சேர்ந்த திரையுலகப் பிரபலங்களில் சூர்யா மற்றும் கஜோலின் பெயர்கள் இடம்பிடித்துள்ளன. இதனைத் தொடர்ந்து நடிகர் சூர்யா மற்றும் கஜோலுக்கு வாழ்த்துகள் குவிந்த வண்ணம் உள்ளது. அவரின் ரசிகர்களும் இதனை கொண்டாடி வருகின்றனர். தென்னிந்தியாவில் இருந்து ஆஸ்கர் பேனலுக்கு செல்லும் முதல் நடிகர் என்ற சிறப்பை சூர்யா பெற்றுள்ளார்.

நடிகர் சூர்யாவைப் பாராட்டியுள்ள தமிழக முதல்வர் ஸ்டாலின், தனது ட்விட்டர் பக்கத்தில்,

சூர்யாவை தமிழ்த் திரையுலகினர் பலரும் பாராட்டி வருகின்றனர்.



Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.