ஆள்துளை கிணற்றில் விழுந்த 5 வயது சிறுவன் மீட்பு| Dinamalar

போபால்: மத்திய பிரதேச மாநிலத்தில் திறந்து கிடந்த ஆள்துளை கிணற்றில் 5 வயது சிறுவன் மீட்பு படையினரால் மீட்க்கப்பட்டான்.
மத்திய பிரதேச மாநிலம் சத்தார்பூர் மாவட்டம், நாராயண்பூர் என்ற கிராமத்தில் இன்று , விவசாயி ஒருவரின் , திபேந்திர யாதவ் என்ற 5 வயது சிறுவன் , அங்குள்ள திறந்து கிடந்த ஆள்துளை கிணற்றில் தவறி விழுந்துவிட்டான்.

தகவலறிந்த தீயணைப்பு மற்றும் மீட்பு படையினர் சிறுவனை மீட்கும் முயற்சியில் இறங்கியுள்ளனர். 30 அடி ஆழத்தில் சிறுவன் சிக்கியுள்ளதாக கூறப்படுகிறது. தொடர்ந்து மீட்புபடையினர் 10 மணி நேரத்திற்கு மேல் போராடி சிறுவனை பத்திரமாக மீட்டனர். தற்போது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

Advertisement

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.