மத்திய அரசின் வேண்டுகோளை ஏற்று தலைமை வழக்கறிஞராக தொடர கே.கே.வேணுகோபால் முடிவு

மத்திய அரசின் தலைமை வழக்கறிஞராக உள்ள கே.கே.வேணுகோபால் அரசின் கோரிக்கையை ஏற்று பதவியில் தொடர ஒப்புக்கொண்டுள்ளார்.

91 வயதான மூத்த வழக்கறிஞரான கே.கே.வேணுகோபால் கடந்த 2017-ம் ஆண்டு ஜூலை 1-ம் தேதி மத்திய அரசின் தலைமை வழக்கறிஞராக நியமிக்கப்பட்டார்.

2020-ம் ஆண்டுடன் அவரது பதவிக்காலம் நிறைவடைந்த நிலையில் இரண்டு முறை நீட்டிக்கப்பட்டது. நீட்டிக்கப்பட்ட அவரது பதவிக்காலம் நாளையுடன் முடிவடைய உள்ள நிலையில் மத்திய அரசின் கோரிக்கையை ஏற்று பதவியில் தொடர் உள்ளார். 

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.