இதுவரை 2 லட்சம் பேர் விண்ணப்பம்| Dinamalar

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

புதுடில்லி: முப்படைகளுக்கு, நான்கு ஆண்டு கால ஒப்பந்த அடிப்படையில் வீரர்களை தேர்வு செய்யும் அக்னிபத் திட்டத்தை, மத்திய அரசு சமீபத்தில் அறிமுகப்படுத்தியது.

இந்நிலையில், ராணுவம், விமானப்படை, கடற்படை என முப்படைகளுக்கும் அக்னிபத் திட்டத்தின் கீழ் தனித்தனியாக வீரர்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர். இத்திட்டத்தின் கீழ் வீரர்களை தேர்வு செய்யும் நடவடிக்கையை, விமானப் படை கடந்த 24ல் துவக்கியது. ‘பணியில் சேர ஆர்வமும், தகுதியும் உள்ளவர்கள், https://agnipathvayu.cdac.in/AV/ என்ற இணையதளத்தில் தங்கள் விபரங்களை பதிவு செய்யலாம்’ என, விமானப் படை தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

latest tamil news

இந்நிலையில், கடந்த ஆறு நாட்களில், அக்னிபத் திட்டத்தின் கீழ் பணியில் சேர இதுவரை இரண்டு லட்சத்து, ஆயிரம் பேர் விண்ணப்பித்துள்ளதாக விமானப்படை தெரிவித்துள்ளது.

Advertisement

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.