படிக்கிற வயசுல இது தேவையா..!! பேருந்தின் கூரைமீது நடனமாடிய பள்ளி மாணவர் படுகாயம்..!!

சென்னை பிராட்வே பேருந்து நிலையத்தில் இருந்து கொளத்தூர், பெரியார் நகருக்கு நேற்று மாலை ஒரு மாநகர பேருந்து ஒன்று சென்று கொண்டிருந்தது. அப்பேருந்தில் ஓட்டேரி பகுதியைச் சேர்ந்த ஓட்டுநர் சம்பத் (53), மாதவரம் பகுதியைச் சேர்ந்த ஜனார்த்தனன் (42) ஆகிய இருவரும் பணியில் இருந்தனர்.

bus

பேருந்து பெரம்பூர், பேப்பர் மில்ஸ் சாலை அருகே சென்றபோது, அந்த பகுதியில் உள்ள தனியார் பள்ளியை சேர்ந்த 10-க்கும் மேற்பட்ட மாணவர்கள் பேருந்தில் ஏறி உள்ளனர். இதில் படிக்கட்டில் நின்று கொண்டிருந்த கொளத்தூர், கம்பர் நகர் பகுதியைச் சேர்ந்த 16 வயது சிறுவன், பேருந்தின் மேற்கூரை மீது ஏறி, நின்றபடி நடனமாடியதாக கூறப்படுகிறது.

இதனைத் தொடர்ந்து, அப்பேருந்து அகரம் பேருந்து நிலையம் அருகே வந்தபோது பேருந்தின் மீது ரோட்டில் சாய்வாக இருந்த மரக்கிளை உரசியது. இதில் மேற்கூரையில் நின்றபடி நடனமாடிய பள்ளி மாணவன் கீழே தவறி விழுந்ததில் படுகாயமடைந்தான்.

accident

இதைக் கண்ட அதிர்ச்சியடைந்த அங்கிருந்தவர்கள் அவனை மீட்டு, பெரியார் நகர் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். அங்கு முதலுதவி சிகிச்சை அளித்து, மேல் சிகிச்சைக்காக அந்த மாணவனை சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு மாணவன் தீவிர சிகிச்சை பெற்று வருகிறான்.

இதுகுறித்து மாநகர பேருந்து ஊழியர்கள் அளித்த புகாரின் பேரில், வில்லிவாக்கம் போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.