பெண்களை ஆபாசமாக சித்தரித்து பணம் பறிக்கும் வடமாநில கும்பலுக்கு சிம்கார்டு விற்றவர் கைது.!

திண்டுக்கல் மாவட்டம் வடமதுரையில் பெண்களை ஆபாசமாக சித்தரித்து பணம் பறிக்கும் வடமாநில கும்பலுக்கு சிம்கார்டு விற்றவரை கொல்கத்தா சைபர் கிரைம் கைது செய்தனர்.

செல்போன் கடை உரிமையாளர் ராஜேந்திரனிடம் சிம் கார்டு கேட்ட வட மாநில நபர், ராஜேந்திரனின் பெயரிலே சிம் கார்டு வழங்கினால் மாதந்தோறும் பணம் தருவதாக கூறி 5 சிம் கார்டுகளை வாங்கியதாக கூறப்படுகிறது.

சமூக வலைதளத்தில் உள்ள பெண்களின் புகைப்படங்களை ஆபாசமாக சித்தரித்து அவர்களிடம் வடமாநில கும்பல் பணம் பறித்து வந்த நிலையில், கும்பலிடம் ஒன்றரை லட்ச ரூபாய் இழந்த கொல்கத்தாவை சேர்ந்த பெண் அளித்த புகாரில், கொல்கத்தா சைபர் கிரைம் போலீசார் சிம் கார்டு எண்களை கொண்டு ராஜேந்திரனை மடக்கிப் பிடித்தனர்.

நீதிமன்ற அனுமதி பெற்ற நிலையில் ராஜேந்திரனை விசாரணைக்காக கொல்கத்தா அழைத்துச் சென்றனர்.  

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.