கடற்றொழில் அமைச்சர் – ஜப்பான் தூதுவருக்கிடையில் சந்திப்பு

வடக்கு மாகாணத்திற்கு 3 நாள் விஜயத்தினை மேற்கொண்டுள்ள இலங்கைக்கான ஜப்பான் தூதுவர் மிசுகோஷி ஹிடேகி கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவை சந்தித்துள்ளார்.

யாழ்ப்பாணத்தில் நேற்று (29) இடம்பெற்ற இந்த சந்திப்பின் போது சமகால அரசியல் நிலைவரங்கள் மற்றும் கடற்றொழில் அமைச்சின் செயற்பாடுகள் தொடர்பாகவும் ஆராயப்பட்டது.

கடலட்டை உற்பத்தி உட்பட நீர்வேளாண்மை  பண்ணை முறையில் ஏற்றுமதித் தரத்திலான கடலுணவுகளை உற்பத்தி செய்வதில் ஏற்பட்டுள்ள முன்னேற்றங்கள் தொடர்பாக ஜப்பானிய துாதுவருக்கு கடற்றொழில் அமைச்சர் தெளிவுபடுத்தினார்.

ஜப்பானின் உயரிய தொழில்நுட்ப அனுபவங்களும் உதவிகளும் கிடைக்குமாயின், எமது மக்களுக்கு பெரிதும் பயனுள்ளதாக அமையும் எனவும் அமைச்சர் இதன் போது ஜப்பானிய துாதுவரிடம் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.