நேட்டோ நாடுகள் மீது ரஷியா, சீனா குற்றச்சாட்டு

மாட்ரிட்,

நேட்டோ நாடுகளின் உச்சிமாநாடானது, ஸ்பெயின் நாட்டின் மாட்ரிடில் நேற்றுடன் நடைபெற்று முடிவடைந்தது. இதில் சைபர் தாக்குதல்கள், காலநிலை மாற்றம் உள்ளிட்ட எண்ணற்ற அச்சுறுத்தல்களால் ஆபத்தான கட்டத்தில் உலகம் மூழ்கியுள்ளது என்று நேட்டோ நாடுகள் எச்சரிக்கையை வெளியிட்டது.

நேட்டோ உறுப்பினர் நாடுகளாக சுவீடன் மற்றும் பின்லாந்து நாடுகள் இணைவதற்கு துருக்கி தரப்பில் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. இதில் தொடர்புடைய நாடுகளின் தலைவர்கள் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். இதனை தொடர்ந்து, துருக்கி தனது எதிர்ப்பு நிலைப்பாட்டை கைவிட்டது.

இதனையடுத்து, நேட்டோ அமைப்பில் சுவீடன் மற்றும் பின்லாந்து நாடுகள் இணைவதற்கு முறைப்படி அழைப்பு விடுத்தனர்.

இந்த நிலையில், நேட்டோவில் சுவீடன் மற்றும் பின்லாந்து ஆகிய நாடுகள் இணைவது பற்றி ரஷியா கவலை கொள்ளவில்லை. அவர்கள் சேர விரும்பினால் சேர்ந்து கொள்ளட்டும். ஆனால், ஒன்றை தெளிவாகவும், சரியாகவும் புரிந்து கொள்ள வேண்டும். இதற்கு முன்வரை அந்த பகுதிகளில் இருந்து அச்சுறுத்தல் எதுவும் இல்லை. ஒருவேளை, அந்த பகுதிகளில் ராணுவ படைகள் குவிக்கப்பட்டாலோ அல்லது ராணுவ உட்கட்டமைப்புகள் ஏற்படுத்தப்பட்டாலோ, எங்களுக்கு எதிராக அச்சுறுத்தல் விடப்பட்டால், அதற்கு எங்கள் தரப்பில் இருந்து பதிலடி தரப்படும். என ரஷிய அதிபர் புதின் எச்சரிக்கை விடுத்தார்.

இது தொடர்பாக சீனா தெரிவிக்கையில், நேட்டோ அமைப்பானது நாட்டை தீங்கான வகையில் தாக்கி, அவதூறு செய்கிறது. நேட்டோ அமைப்பானது ஐரோப்பிய ஒன்றியத்தில், மற்ற நாடுகள் சவால்களை முன்வைக்கின்றன என்று கூறுகிறது, ஆனால் நேட்டோ தான் உலகம் முழுவதும் பிரச்சனைகளை உருவாக்குகிறது.” என தெரிவித்தது.


Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.