சிங்கப்பூர் நிறுவனத்துடன் செமிக்கண்டக்டர் பூங்கா அமைப்பதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம்! ஸ்டாலின் முன்னிலையில் கையெழுத்தானது

சென்னை:  சிங்கப்பூர் நிறுவனத்துடன் செமிக்கண்டக்டர் உயர் தொழில் நுட்பப் பூங்கா அமைப்பதற்கான  புரிந்துணர்வு ஒப்பந்தம் தமிழ்நாடு முதல்வர் மு.க. ஸ்டாலின் முன்னிலையில் கையெழுத்தானது

சிங்கப்பூரை தலைமையிடமாகக் கொண்ட ஐஜிஎஸ்எஸ் வென்ச்சர்ஸ் பிரைவேட் லிமிடெட் (IGSS Ventures – IGSSV), தமிழ்நாட்டில் 300 ஏக்கர் பரப்பளவில் ரூ. 25,600 கோடி மதிப்பீட்டில் ஒரு செமிகண்டக்டர் உயர் தொழில்நுட்பப் பூங்காவை அமைப்பதற்காக புரிந்துணர்வு ஒப்பந்தம்  கையெழுத்தானது. தமிழ்நாடு அரசின் சார்பாக வழிகாட்டி நிறுவனத்துக்கும் ஐ.ஜி.எஸ்.எஸ். வென்ச்சர்ஸ் இடையே உயர் தொழில் நுட்ப  பூங்கா அமைக்கப்படும் என தகவல் வெளியாகியுள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.