ஒருமுறை பயன்படுத்தும் பிளாஸ்டிக் பொருட்களுக்கான தடை: நாடு முழுதும் அமல்| Dinamalar

புதுடில்லி: ஒரு முறை பயன்படுத்தப்படும் ‘பிளாஸ்டிக்’ பொருட்களுக்கு விதிக்கப்பட்ட தடை உத்தரவு இன்று (ஜூலை 1) முதல் அமலுக்கு வந்தது.

ஒருமுறை மட்டும் பயன்படுத்தக்கூடிய பிளாஸ்டிக் பொருள்களை 2022-ஆம் ஆண்டுக்குள் முற்றிலும் ஒழிக்க வேண்டும் என்று பிரதமர் நரேந்திர மோடி வலியுறுத்தினார். இதைத்தொடா்ந்து, பிளாஸ்டிக் கழிவு மேலாண்மை திருத்த விதிமுறைகளை கடந்த ஆண்டு ஆகஸ்ட் 12ம் தேதி மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகம் அறிவித்தது.

அதன்படி, ஒரு முறை மட்டும் பயன்படுத்தக்கூடிய பிளாஸ்டிக் பொருள்களின் உற்பத்தி, இறக்குமதி, சேமிப்பு, விநியோகம், விற்பனை, பயன்பாடு உள்ளிட்ட அனைத்திற்கும் ஜூலை 1ம் தேதி முதல் நாடு முழுவதும் தடை விதிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது. இந்த தடை உத்தரவு இன்று முதல் அமலுக்கு வந்தது. தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருள்களின் விற்பனையைத் தடுக்க நடவடிக்கை எடுக்குமாறு மாநில அரசுகளுக்கு மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது.

Advertisement

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.