சூடானில் ராணுவ ஆட்சிக்கு எதிராக போராட்டம்.. ராணுவ வீரர்கள் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 8 பேர் உயிரிழப்பு..!

வட ஆப்பரிக்க நாடான சூடானில் ராணுவ ஆட்சிக்கு எதிராக திரண்ட மக்கள் மீது ராணுவம் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 8 பேர் உயிரிழந்தனர்.

தலைநகர் கார்தோமில் அதிபர் அலுவலகத்தை நோக்கி பேரணியாக செல்ல முயன்ற மக்கள் மீது கண்ணீர் புகை குண்டு வீசீயும் தண்ணீர் பீய்ச்சியடித்தும் விரட்டியடிக்கப்பட்டனர்.

இதே போன்று ஓம்டுர்மன், பஹ்ரி ஆகிய நகரங்களில் சாலையில் டயர்களை கொளுத்தி போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது ராணுவ வீரர்கள் துப்பாக்கிச்சூடு நடத்தினர்.  

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.