குடி போதையில் கலாட்டாபிரிட்டன் எம்.பி., ராஜினாமா| Dinamalar

லண்டன்:பிரிட்டனில் குடி போதையில்இருவரை அடித்து, உதைத்த சர்ச்சையில், பார்லிமென்ட் துணை கொறடா பதவியில் இருந்து ஆளுங்கட்சி எம்.பி., விலகியுள்ளார்.
ஐரோப்பிய நாடான பிரிட்டனில் ஆளும் பழமைவாத கட்சி எம்.பி.,யான கிறிஸ் பின்ச்சர், மதுபான விடுதியில் இருவரை அடித்து, உதைத்ததாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.இதையடுத்து, அவரை பதவி நீக்கம் செய்யக் கோரி எதிர்க்கட்சியினர் வலியுறுத்தினர். இந்நிலையில் கிறிஸ் பின்ச்சர், பார்லி., துணை கொறடா பதவியை நேற்று ராஜினாமா செய்துள்ளார்.

இது குறித்து பிரதமர் போரிஸ் ஜான்சனுக்கு அவர் எழுதியுள்ள கடிதத்தில், ‘அளவிற்கதிகமாக மது குடித்து, அனைவரையும் தர்மசங்கடத்தில் ஆழ்த்தியதற்கு வருந்துகிறேன்’ என குறிப்பிட்டுள்ளார்.
சமீபத்தில், ஆளுங்கட்சி தலைவர் பதவியில் இருந்து, ஆலிவர் டவ்டன் பதவி விலகினார். இந்நிலையில், கிறிஸ் பின்ச்சரின் பதவி விலகல், ஏற்கனவே கொரோனா விருந்து சர்ச்சையில் சிக்கியுள்ள பிரதமர் போரிஸ் ஜான்சனுக்கு மேலும் நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது.

Advertisement

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.