மேட்ரிமோனியில் அறிமுகமான பெண் ஐ.டி ஊழியரிடம் திருமணம் செய்து கொள்வதாக கூறி ரூ.19 லட்சம் மோசடி..!

கோயம்புத்தூரில், மேட்ரிமோனி மூலம் அறிமுகமான விவகாரத்தான பெண் ஐ.டி.ஊழியரை திருமணம் செய்துக் கொள்வதாகக் கூறி 19 லட்சம் ரூபாய் வாங்கி ஏமாற்றிய நபரை போலீசார் தேடி வருகின்றனர்.

ஒத்தக்கல் மண்டபத்தைச் சேர்ந்த 36 வயது பெண், 2வதாக திருமணம் செய்துக் கொள்ள மேட்ரிமோனியில் விண்ணப்பித்துள்ளார்.

அதில் அறிமுகமான மார்சியஸ் சிங் ஜித்தா என்ற நபர், திருமணம் செய்துக் கொள்வதாக உறுதி அளித்த நிலையில் இருவரும் செல்போனில் பேசி வந்துள்ளனர்.

இந்நிலையில், தனது தாயின் மருத்துவ சிகிச்சைக்கு அதிக பணம் தேவைப்படுவதாக ஜித்தா கேட்டதால், இந்த பெண் தனது நகையை அடமானம் வைத்து 19 லட்சம் ரூபாய் பணத்தை அவரது வங்கிக் கணக்கில் செலுத்தியதாக கூறப்படுகிறது.

பிறகு ஜித்தாவின் போன் சுவிட்ச் ஆப் செய்யப்பட்டதால் தான் ஏமாற்றப்பட்டதை அறிந்த அந்த பெண் போலீசில் புகாரளித்துள்ளார். 

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.