விழுப்புரம் || பிறந்து 15 நாட்களான ஆண் குழந்தையை திண்ணையில் போட்டுவிட்டுச் சென்ற பெற்றோர்.. காவல்துறை விசாரணை..!

பிறந்து 15 நாட்களே ஆன பச்சிளம் குழந்தையை விட்டு சென்ற பெற்றோர்கள் குறித்து காவல்துறையினர் தேடி வந்தனர்.

விழுப்புரம் மாவட்டம் பீமாபுரம் கிராமத்தில் ஏகாம்பரம் என்பவர் வீட்டுத் திண்ணையில் பிறந்து 15 நாட்களே ஆன ஆண் குழந்தையை இருந்துள்ளது. இதனை கண்டு அதிர்ச்சியடைந்த அந்த வீட்டில் உள்ளவர்கள் மற்றும் கிராம மக்களள் காவல்துறையினருக்கு தகவல் அளித்தனர்.

விரைந்து வந்த காவல்துறையினர் குழந்தையை மீட்டு குழந்தைகள் நல அலுவலரிடம் ஒப்படைத்தனர். இதுகுறித்து வழக்குபதிவு செய்த காவல்துறையினர் குழந்தையின் பெற்றொர் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.