இங்கிலாந்துக்கு எதிரான 5வது டெஸ்ட் : ரிஷப் பண்ட் அதிரடி சதம்

பர்மிங்காம்,

கடந்த ஆண்டு கொரோனா அச்சத்தால் தள்ளிவைக்கப்பட்ட இங்கிலாந்து அணிக்கு எதிரான கடைசி டெஸ்ட் இன்று நடைபெற்று வருகிறது. இந்த போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பந்துவீச்சை தேர்வுசெய்தது. அதன்படி இந்திய அணி முதலில் பேட்டிங் செய்து வருகிறது.

தொடக்க ஆட்டக்காரர்களாக சுப்மன் கில்லும், புஜாராவும் களமிறங்கினர். கில் 17 ரன்னிலும், புஜாரா 13 ரன்னிலும் ஆட்டமிழந்தனர். விகாரியும் 20 ரன்னுக்கு ஆட்டமிழந்தார். பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட விராட் கோலி 11 ரன்னில் போல்டானார். ஸ்ரேயஸ் அய்யர் 15 ரன்னில் ஆண்டர்சன் பந்துச்சில் விக்கெட் கீப்பர் பில்லிங்சிடம் பிடிபட்டார். இதனால் இந்திய அணி 100 ரன்னுக்குள் 5 விக்கெட்டுகளை இழந்தது. இதையடுத்து ரிஷப் பண்ட்டும், ஜடேஜாவும் இணைந்து தடுமாடிய இந்திய அணியை நல்ல நிலைக்கு கொண்டு வந்தனர்.ஜடேஜா பொறுமையுடன் ஆட ,அரைசதம் கடந்த பண்ட் பந்துகளை நாலாபுறமும் பவுண்டரிக்கு பறக்க விட்டார்.இதனால் இந்திய அணியின் ரன்கள் மளமளவென உயர்ந்தது.

சிறப்பாக விளையாடிய ரிஷப் பண்ட் 89 பந்துகளில் சதம் அடித்து அசத்தினார் .இது டெஸ்ட் கிரிக்கெட்டில் அவரது 5வது சதமாகும் .இதனை தொடர்ந்து ஜடேஜா 109பந்துகளில் அரைசதம் அடித்தார்.


Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.