மத்திய அரசு துறையில் வேலை வாங்கி தருவதாக கூறி 30 லட்சம் ரூபாய் மோசடி செய்த நபர் கைது.!

சென்னை திருவொற்றியூரில் மத்திய அரசு துறையில் வேலை வாங்கி தருவதாக கூறி இருவரிடம் 30 லட்சம் ரூபாய் மோசடி செய்த நபரை போலீசார் கைது செய்தனர்.

மணலியைச் சேர்ந்த துரைராஜ்  13லட்சம் ரூபாயும், ஆதிகேசவன் என்பவர் 17 லட்சம் ரூபாயும் தங்களது மகனுக்கு மத்திய அரசு வேலை வேண்டி ஹரிகிருஷ்ணன் என்பவரிடம் கொடுத்துள்ளனர்.

ஆனால் 3 ஆண்டுகள் ஆகியும் ஹரிகிருஷ்ணன் சொன்னபடி வேலை வாங்கித் தராமலும் பணத்தை திருப்பி கேட்ட போது அவர்களை மிரட்டியதாகவும் கூறப்படுகிறது. இதனால் பாதிக்கப்பட்ட இருவரும் திருவொற்றியூர் காவல் நிலையத்தில் ஹரிகிருஷ்ணன் மீது புகார் அளித்தனர். 

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.