நிலத் தகராறில் பா.ஜ.க. அலுவலகத்திற்கு தீ வைப்பு.. பா.ஜ.க.வினர் சாலை மறியல்..!

மயிலாடுதுறை மாவட்டம் எருக்கட்டாஞ்சேரியில் பா.ஜ.க. அலுவலகத்திற்கு தீ வைத்தவரை சிசிடிவி காட்சிகளை அடிப்படையாக கொண்டு போலீசார் தேடி வருகின்றனர்.

மாவட்ட செயலாளர் பாலாஜி என்பவருக்கும், அதேபகுதியைச் சேர்ந்த உதயகுமார் என்பவருக்கும் இடத்தகராறு இருப்பதாகவும், அதுகுறித்த வழக்கு நிலுவையில் இருப்பதாகவும் கூறப்படுகிறது.

இந்நிலையில், பாலாஜியின் கீற்றுக் கொட்டகை அலுவலகத்திற்கு உதயகுமார் தீ வைத்ததாக, பா.ஜ.க.வினர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

பாலாஜி அளித்த புகாரில் சிசிடிவி காட்சிகளை அடிப்படையாக கொண்டு போலீசார் உதயகுமாரை தேடி வருகின்றனர்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.