Twitter Deal: எலான் மஸ்க் வசம் கூடுதல் தகவல்கள் – முடிவு எடுப்பதில் தாமதம்!

Elon Musk Twitter deal: ஸ்பேஸ் எக்ஸ், டெஸ்லா போன்ற நிறுவனங்களின் நிறுவனருமான எலான் மஸ்க், பிரபல மைக்ரோ புளாகிங் தளமான ட்விட்டரை வாங்கியது உலகளவில் டிரெண்டிங்கான செய்தியாக மாறியது.

இந்த நிலையில், ட்விட்டர் தனக்கு அளித்த தகவல்கள் போலியானது என்ற குற்றச்சாட்டை முன்னிறுத்தி, ஒப்பந்தத்தை கிடப்பில் போட்டார் எலான் மஸ்க். தற்போது, மஸ்க் கோரிய அனைத்து தகவல்களையும் நாங்கள் சமர்பித்துள்ளோம் என்றும், இனி முடிவு அவர் கையில் தான் உள்ளது என ட்விட்டர் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

ட்விட்டர் ஒப்பந்தம் சர்ச்சை

ட்விட்டர் ஒப்பந்தத்தின் போது Twitter-க்கு மேலும் ஒரு நெருக்கடியை Elon Musk கொடுத்தார். ட்விட்டரின் ஒப்பந்தத்திற்கான கோப்புகளில் வழங்கப்பட்ட தகவல்தான் இந்தக் குழப்பங்களுக்கு எல்லாம் காரணம்.

மேலும் படிக்க|
PAN-Aadhaar Link: பான் உடன் ஆதாரை இணைப்பதற்கான காலக்கெடு முடிவு – இனி அபராதம் செலுத்த வேண்டும்!

ட்விட்டர் தலைமை நிர்வாக அலுவலர்களின் கூற்றுப்படி, மஸ்க் இந்த ஒப்பந்தத்தை தடுத்துவைத்துள்ளார் என்று கூறப்படுகிறது. அதற்கு பராக் அகர்வால் ஆதாரம் அளிக்காததே காரணம் என்று அவர்கள் தெரிவித்துள்ளனர். சரி, எலான் மஸ்க் எந்த ஆதாரத்தைக் குறித்து பேசுகிறார் என்பதை விரிவாகப் பார்ப்போம்.

ட்விட்டரில் உலாவும் பாட்கள்

எலான் மஸ்க் டெஸ்லராட்டியின் ட்வீட்டுக்கு ஒப்பந்தம் குறித்த புதிய தகவலுடன் பதிலளித்தார். அவர் பதிவிட்டிருந்த ட்வீட்டில், “ட்விட்டருக்கான எனது சலுகை ஒப்பந்தத்தில் பதிவு செய்யப்பட்டதை அடிப்படையாகக் கொண்டது.

ட்விட்டரின் தலைமை செயல் அலுவலர், ஒப்பந்தத்தில் கூறியபடி, போட்கள் 5% விழுக்காட்டிற்கும் குறைவாக இருப்பதற்கான ஆதாரங்களை வழங்க மறுத்துவிட்டார். மேலும் அது நிரூபிக்கப்படும் வரை ஒப்பந்தம் தொடராது.” என்று குறிப்பிட்டிருந்தார்.

மேலும் படிக்க|
Telecom: 30 நாள்கள் வேலிடிட்டி தரும் BSNL மலிவு விலை திட்டங்கள் அறிமுகம்!

ட்விட்டர் இந்த மாத தொடக்கத்தில் ஒரு SEC தாக்கல் செய்ததில், அதன் தளங்களில் 5% மட்டுமே போட்கள் அல்லது ஸ்பேம் கணக்குகள் உள்ளது என்று கூறியிருந்தது. இதனை ஒத்துக்கொள்ளாத Tesla நிறுவனர் Elon Musk, அதற்கான ஆதாரங்களைக் கேட்டு ஒப்பந்தத்தை தற்காலிமாக முடக்கியுள்ளார்.

ட்விட்டரில் அதிகபடியான பாதுகாப்பு அம்சங்களை மேற்கொள்ளவும், பேச்சுக்கு சுதந்திரம் அளிக்கும் வகையிலும் பல முடிவுகளை எலான் மஸ்க் எடுத்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

எலான் மஸ்க் ஏப்ரல் மாதம் ட்விட்டரை ரூ.3.3 லட்சம் கோடி கொடுத்து வாங்க ஒப்புக்கொண்டார். கடந்த வாரம், தளத்தில் உள்ள பாட்களின் எண்ணிக்கை அல்லது ஸ்பேம் கணக்குகள் குறித்த விவரங்கள் வழங்கப்படாததால், ஒப்பந்தத்தை நிறுத்தி வைக்கப்பட்டது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.