என் மூச்சு உள்ளவரை நடித்துக்கொண்டே இருப்பேன் – வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்த நாசர்

தமிழ் சினிமாவில் பழம்பெரும் நடிகர்களில் ஒருவர் நாசர். 1985ம் ஆண்டு வெளியான கல்யாண அகதிகள் என்ற படத்தின் மூலம் தனது திரைப்பயணத்தை தொடங்கிய நாசர் தொடர்ந்து பல முன்னணி நடிகர்ளுடன் இணைந்து வில்லன், குணச்சித்திரம், காமெடி உள்ளிட்ட பல கேரக்டர்களில் நடித்து பல வெற்றிப்படங்களை கொடுத்துள்ளார்.

நடிப்பு மட்டுமல்லாது ஒரு சில திரைப்படங்களையும் இயக்கியுள்ள நாசர் தற்போது  நடிப்பில் இருந்து விலக உள்ளதாகவும், அவர் தற்போது நடித்து வரும் படமே அவரது கடைசி படம் என்று வலைதளங்ளில் தகவல் வெளியானது. இதை பார்த்த ரசிகர்கள் பெரும் அதிர்ச்சியடைந்த நிலையில், இந்த தகவல் வெறும் வதந்தி என்று தற்போது உறுதி செய்துள்ளார் நாசர்.

சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இல்லாத நாசர், தனது கடைசிப் படம் குறித்த பரவி வரும் தவறான தகவலுக்கு அவரது பி.ஆர்.ஓ.வின் மூலம் பதில் அளித்துள்ளார். இது தொடர்பாக அவரது பி.ஆர்.ஓ. வெளியிட்டுள்ள ட்விட்டர் அறிக்கையில், தனது கடைசி மூச்சு வரை நடிப்பேன் என்று உறுதியளித்த நாசர், வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்ததுடன் இந்த தகவல்களை பரப்புவர்களுக்கும் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

மேலும் இந்த வதந்தி குறித்து  நாசரின் மனைவி கமீலா நாசரும் தனது ட்விட்டர் பக்கத்தில், “நாசரின் உடல்நிலை, தொழிலில் இருந்து விலகுதல் (நடிப்பு) போன்ற செய்திகள் தவறானவை. நாசருக்கு உணவு மூச்சு இரண்டுமே சினிமாதான். அக்கறை காட்டும் அனைத்து நண்பர்களுக்கும் நன்றி. பொய்யான செய்திகளை பரப்ப வேண்டாம் என்று கூறியுள்ளார்.

இந்த அறிக்கையை வதந்திக்கு நாசரின் மனைவியும் முற்றுப்புள்ளி வைத்துள்ளார். இதனால் ரசிகர்கள் நிம்மதியடைந்தனர். தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் மற்றும் இந்தி மொழிகளில் திரைப்படங்களில் நடித்துள்ள நாசர், இயக்குனர், தயாரிப்பாளர், டப்பிங் கலைஞர் மற்றும் பாடகர் என பன்முக திறமை கொண்டவர், தற்போது தமிழில் ‘தி லெஜண்ட்’, வாய்தா உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.