இந்தியா – இங்கிலாந்து இடையிலான 5வது டெஸ்ட் போட்டி மழையால் பாதிப்பு

பர்மிங்காம்,

கடந்த ஆண்டு கொரோனா அச்சத்தால் தள்ளிவைக்கப்பட்ட இங்கிலாந்து அணிக்கு எதிரான கடைசி டெஸ்ட் நடைபெற்று வருகிறது. இந்த போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பந்துவீச்சை தேர்வுசெய்தது. அதன்படி இந்திய அணி முதலில் பேட்டிங் செய்தது.முதல் இன்னிங்சில் இந்திய அணி 84.5 ஓவர்களில் 416 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து ஆட்டமிழந்தது. அதிகபட்சமாக அதிரடியா விளையாடிய பண்ட் 146 ரன்களும் ,ஜடேஜா 104 ரன்களும் ,பும்ரா 31 ரன்களும் எடுத்தனர்.

தொடர்ந்து முதல் இன்னிங்ஸில் விளையாடிய இங்கிலாந்து அணி தொடக்க வீரர்கள் ,லீஸ் (6 ) ரன்கள் ,சாக் கிராலி( 9 ) ரன்கள் எடுத்து பும்ரா பந்துவீச்சில் வெளியேறினர். இங்கிலாந்து 31 ரன்கள் எடுத்தபோது மழை குறுக்கிட்டது.மழை தொடர்ந்து பெய்து வருவதால் ஆட்டம் பாதிக்கப்பட்டுள்ளது.


Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.