திருநெல்வேலி || ஆன்லைன் ரம்மி விளையாட சொந்த வீட்டிலேயே திருடிய இளைஞர்.. விசாரணையில் வெளிவந்த உண்மை..!

ஆன்லைன் ரம்மி விளையாடுவதற்காக சொந்த வீட்டிலேயே திருடிய இளைஞரை காவல்துறையினர் கைது செய்தனர்.

திருநெல்வேலி மாவட்டம் உவரி பகுதியை சேர்ந்தவர் அந்தோணி பாபு.  இவருக்கு சோபனா என்ற மனைவி உள்ளார். வங்கியில் அடமானம் வைத்த சோபனாவின் நகைகளை நீட்டு அவரது வீட்டில் வைத்திருந்தனர். இந்நிலையில், நேற்று சோபனாவின் நகைகளை காணவில்லை என கூறப்படுகிறது.

இதனால் அதிர்ச்சி அடைந்தவர்கள் உடனடியாக காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். காவல்துறையினருக்கு அந்தோணி ராஜன் மீது சந்தேகம் ஏற்பட்டது. அவரிடம் நடத்தி விசாரணையில் முன்னுக்கு பின்னும் முரணாக பதில் அளித்ததால் காவல்துறையினர் கிடுக்குபிடி விசாரணை மேற்கொண்டனர்.

அப்பொழுது அவர் ஆன்லைன் ரம்மி விளையாட நகைகளை திருடியது தெரிய வந்தது. இதனை அடுத்து அவரிடம் இருந்து நகைகளை மீட்ட காவல்துறையினர் அவரை கைது செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். ஆன்லைன் ரம்பி விளையாட சொந்த வீட்டிலேயே திருடிய சம்பவம் அதிர்சியை ஏற்படுத்தியுள்ளது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.