பக்தர்களின் வருகை தொடர்ந்து அதிகரிப்பு: நெரிசலை குறைக்க மாற்று ஏற்பாடுகள் செய்யப்படுமா?

அத்தி வரதர் எழுந்தருளும் வைபவத்தின் நான்காம் நாளில் வெண்பட்டு அணிந்தவாறு அத்தி வரதர் பக்தர்களுக்கு சயன கோலத்தில் அருள்பாலித்தார்.

காஞ்சிபுரம் அத்தி வரதர் விழாவுக்கு பக்தர்கள் வருகை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. உள்ளே வரும் பக்தர்களின் எண்ணிக்கையும், வெளியேறும் பக்தர்களின் எண்ணிக்கையும் சமமாக உள்ளதா என்பதை தொடர்ந்து கண்காணிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் வலியுறுத்துகின்றனர். கோயிலுக்குள் வரிசையில் வரும் பக்தர்களை கண்காணிப்பதற்கும், அவர்கள் சிரமமின்றி அத்தி வரதரை தரிசிக்கவும் உதவும் வகையில் அர்ப்பணிப்பு உணர்வுடன் கூடிய காவல் அதிகாரிகளையும், காவலர்களையும் கோயிலுக்குள் பணியில் அமர்ந்த வேண்டும் என்று பக்தர்கள் வலியுறுத்துகின்றனர்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.