இந்திய கடற்றொழிலாளர்களின் அத்துமீறல்களை கட்டுப்படுத்த தொடர்ந்தும் நடவடிக்கை – கடற்றொழில் அமைச்சர்

இந்திய கடற்றொழிலாளர்களின் அத்துமீறல்களை கட்டுப்படுத்த தொடர்ந்தும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருவதாக கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.

பாராளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகர இன்று (04) பாராளுமன்றத்தில் எழுப்பிய கேள்வி ஒன்றுக்கு பதிலளிக்கும் போதே அமைச்சர் இவ்வாறு பதிலளித்துள்ளார்.

இதேவேளை ,நேற்றைய தினம் இலங்கை கடற்பகுதிக்குள் அத்துமீறிய இந்திய கடற்றொழிலாளர்கள் 12 பேர் கைதுசெய்யப்பட்டதாகவும் அவர் சுட்டிக்காட்டியிருந்தார்.இவர்கள் பயன்படுத்திய படகும் கைப்பற்றப்பட்டுள்ளது.

எரிபொருள் பிரச்சினை காரணமாக தொடர்ந்தும் கடற்றொழிலாளர்கள், நெருக்கடிகளுக்கு உள்ளாகியுள்ளனர்.

இது குறித்து தாமும் தீர்வைக் காண கடுமையாக முயன்று வருவதாகவும்
விரைவில் இதற்கான தீர்வைக் காணமுடியும் என்றும் அமைச்சர் நம்பிக்கை வெளியிட்டார்

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.