டோக்கன் முறை தற்போது நடைமுறைப்படுத்தப்படவில்லை – அமைச்சர் காஞ்சன விஜேசேகர

எரிசக்தி அமைச்சினால் எரிபொருள் நிரப்பு நிலையங்களில் டோக்கன் முறை தற்போது நடைமுறைப்படுத்தப்படவில்லை என அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.

ஜூன் 23 மற்றும் 24 ஆம் திகதிகளில் காணப்பட்ட நீண்ட வரிசைகளைக் குறைக்க பாதுகாப்பு பேரவை ஆலோசனையின் பேரில் ஆரம்பத்தில் டோக்கன் முறை அறிமுகப்படுத்தப்பட்டது எனவும் மேலும் பொதுமக்கள் வரிசையில் நிற்பதை தவிர்ப்பதற்காகவும், ஜூலை 11 – 15 ஆம் திகதிகளில் எரிபொருள் கிடைத்தவுடன் எரிபொருள் நிரப்பு நிலையத்திற்குச் செல்லுமாறும் தெரிவித்தே டோக்கன் முறை அறிமுகப்படுத்தப்பட்டது. அந்த சில நாட்களுக்கு மட்டுமே இந்த முறை பின்பற்றப்பட்டது” எனவும் அமைச்சர் குறிப்பிட்டார்.

தற்போது எரிபொருள் நிரப்பு நிலையங்களில் டோக்கன் வழங்கும் முறையானது எரிசக்தி அமைச்சின் தலையீடு இன்றி மேற்கொள்ளப்பட்டு வருவதாக அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.

டோக்கன் முறை தொடர்வதை அமைச்சர் நிராகரித்த போதிலும், பல எரிபொருள் நிலையங்கள் எரிபொருள் பெற வரிசையில் காத்திருக்கும் மக்களுக்கு டோக்கன்கள் வழங்கப்படுவதாக அமைச்சர் கூறியுள்ளார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.