பீர் குடித்தால் நீரிழிவு நோய் வராது: புதிய ஆய்வில் கண்டுபிடிப்பு| Dinamalar

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

லிஸ்பன் : பீர் குடித்தால் நீரிழிவு, இதய நோய்கள் வராது என ஒரு ஆய்வில் கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது.

ஐரோப்பிய நாடான போர்ச்சுக்கல்லைச் சேர்ந்த சுகாதார ஆராய்ச்சி மையம், 23 – 58 வயதுக்கு உட்பட்ட சிலரிடம் சமீபத்தில் ஒரு ஆய்வு நடத்தியது. தொடர்ந்து நான்கு வாரங்கள் அவர்களுக்கு 330 மி.லி., பீர் வழங்கப்பட்டது. நான்கு வாரத்துக்குப் பின், அவர்களுக்கு நடத்திய பரிசோதனையில், நுண்ணுயிரி செயல்பாடு அதிகரித்து இருந்தது. இது, நீரிழிவு மற்றும் இதய நோய் வராமல் தடுக்கிறது. ஆனால், ஆல்கஹால் இல்லாத பீர் குடித்தால் தான் நுண்ணுயிரி செயல்பாடு அதிகரிக்கும்.

latest tamil news

மேலும், பீர் குடித்தால் உடலில் கொழுப்பு சேராது; உடல் எடையும் கூடாது. அதேநேரத்தில், குடல் நுண்ணுயிரிகளின் பன்முகதன்மையும் அதிகரிக்கும் என அந்த ஆய்வு முடிவு கூறுகிறது. அதேநேரத்தில் ஆல்கஹால் கலந்த பீர் குடிப்பது உடல் நலத்துக்கு தீங்கு விளைவிக்கும் எனவும் ஆய்வாளர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

Advertisement

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.