6 கருணை மனுக்களை நிராகரித்த ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த்| Dinamalar

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

புதுடில்லி: ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் தன் பதவிக்காலத்தில் ஆறு பேரின் கருணை மனுக்களை நிராகரித்துள்ளார். ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் 2017, ஜூலை 25ல் பதவி ஏற்றார். அவருடைய பதவிக்காலம் வரும் 25ம் தேதியுடன் நிறைவடைகிறது.

துாக்குத் தண்டனை:


அடுத்த ஜனாதிபதிக்கான தேர்தல் வரும் 18ல் நடக்கிறது. பா.ஜ., தலைமையிலான தே.ஜ., கூட்டணி சார்பில் திரவுபதி முர்மு, எதிர்க்கட்சிகள் சார்பில் யஷ்வந்த் சின்ஹா களத்தில் உள்ளனர். இந்நிலையில், ராம்நாத் கோவிந்த் தன் ஐந்து ஆண்டு பதவிக் காலத்தில், துாக்குத் தண்டனை விதிக்கப்பட்ட ஆறு பேரின் கருணை மனுக்களை நிராகரித்துள்ளார்.

பீஹாரின் வைசாலி மாவட்டத்தை சேர்ந்த ஜகத்ராய், விஜயேந்திர மகோத்தா என்பவர் வீட்டுக்கு தீ வைத்தார். இதில் விஜயேந்திராவின் மனைவி மற்றும் ஐந்து குழந்தைகள் உடல் கருகி இறந்தனர். கடந்த 2006ல் நடந்த இந்தக் கொலை வழக்கு விசாரணை முடிவில், 2013ல் ஜகத்ராய்க்கு துாக்குத் தண்டனை விதிக்கப்பட்டது.

latest tamil news

இதையடுத்து, ஜகத்ராய் அனுப்பிய கருணை மனுவை ராம்நாத் கோவிந்த் நிராகரித்தார் அதே போல், டில்லியில் 2012ல் நிர்பயா என்ற மாணவியை ஓடும் பஸ்சில் கூட்டு பலாத்காரம் செய்த முகேஷ்சிங், வினய் சர்மா, அக்ஷய்குமார் சிங், பவன்குப்தா உட்பட ஆறு பேர் கைது செய்யப் பட்டனர். முக்கிய குற்றவாளியான ராம்சிங் திஹார் சிறையில் தூக்கிட்டு தற்கொலை செய்தார். மீதி ஐந்து பேரில் ஒரு சிறுவன் விடுவிக்கப்பட்டான்.

பதவிக்காலம்:


மற்ற நான்கு பேருக்கும் துாக்குத் தண்டனை விதிக்கப்பட்டது. இந்த நான்கு பேரும் தனித் தனியாக அனுப்பிய கருணை மனுக்களை ராம்நாத் கோவிந்த் 2020ல் நிராகரித்தார். கடந்த 2006ல் துாக்கு தண்டணை விதிக்கப்பட்ட சஞ்சய் என்பவரின் கருணை மனுவையும் தன் பதவிக் காலத்தின் இறுதியில் ராம்நாத் நிராகரித்து விட்டார். ஜனாதிபதி பதவி வகித்த பிரணாப் முகர்ஜி 30; வெங்கட்ராமன் 45; அப்துல்கலாம் 2; பிரதிபா பாட்டீல் 5 கருணை மனுக்களை நிராகரித்துள்ளனர்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்

Advertisement

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.