அண்ணா ஆர்ச் பகுதியில் நாளை முதல் போக்குவரத்து மாற்றம் – இனிமே இப்படித்தான் போகணும்!

அண்ணா ஆர்ச் பகுதியில் நாளை முதல் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட உள்ளதாக சென்னை போக்குவரத்து காவல்துறை தெரிவித்துள்ளது.
சென்னை ஈ.வே.ரா சாலையானது சென்னையில் முக்கிய சாலைகளில் ஒன்றாகும். பெருகி வரும் வாகன போக்குவரத்தால் காலை மற்றும் மாலை வேளைகளில் இந்த சாலையில் போக்குவரத்து நெரிசல்கள் அதிக அளிவில் ஏற்படுகிறது. எனவே ஈ.வே.ரா சாலையில் போக்குவரத்து நெரிசலை குறைக்க போக்குவரத்து மாற்றங்கள் நாளை 09.07:2022 முதல் 10 நாட்களுக்கு சோதனை ஓட்டமாக அமல்படுத்தப்பட உள்ளதாக சென்னை போக்குவரத்து காவல்துறை தெரிவித்துள்ளது.
கோயம்பேட்டுலிருந்து அமைந்தகரை நோக்கிச் செல்லும் வாகனங்கள் அண்ணா ஆர்ச் வளைவில் இடதுபுறமாக திருப்பிவிடப்படும். இந்த வாகனங்கள் அண்ணா ஆர்ச் மேம்பாலத்தின் கீழ் சுமார் 75 மீட்டர் சுற்றுப்பாதையில் ‘யு’ திருப்பம் மேற்கொண்டு ஈ.வி.ஆர். சாலையை அடைந்து அமைந்தகரைக்கு வேண்டும். நெல்சன் மாணிக்கம் சாலைக்கு மேம்பாலத்தில் வழியாக சென்று அடையலாம் என்று சென்னை போக்குவரத்து காவல்துறை தெரிவித்துள்ளது.
image
இதைபோல் அமைந்தகரையில் இருந்து கோயம்பேடு நோக்கி செல்லும் செல்ல செல்ல விரும்புவோர் வாகனங்கள் அண்ணா ஆர்ச் சந்திப்பில் பாதசாரி கடக்கும்போது தவிர தடையின்றி செல்லலாம். அண்ணாநகரில் இருந்து கோயம்பேடு நோக்கி செல்லும் வாகனங்கள் அண்ணா வளைவில் வலதுபுறம் திரும்பும்போது, பாதசாரி கடக்கும் போது தவிர. இடையூறு இல்லாமல் தொடர்ந்து செல்லலாம்.
கோயம்பேட்டில் இருந்து செல்லும் வாகனங்கள் அரும்பாக்கம் ரசாக் கார்டன் சாலையில் வலதுபுறம் திரும்பும் வகையில் அண்ணா ஆர்ச்சில் ‘யு’ திருப்பம் எடுத்து அண்ணா வளைவில் வலதுபுறம் திரும்பி அரும்பாக்கத்தை அடையும் என்று சென்னை போக்குவரத்து காவல்துறை தெரிவித்துள்ளது. இதன் மூலம் அரும்பாக்கம் அருகே உள்ள ஈ.வி.ஆர் சாலையிலும் நெரிசல் குறையும் என்றும், பொதுமக்கள் ஒத்துழைப்பு தருமாறும் சென்னை போக்குவரத்து காவல்துறை தெரிவித்துள்ளது.Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.