நடிகர் விக்ரமுக்கு மாரடைப்பு இல்லை; நலமுடன் இருக்கிறார்! காவேரி மருத்துவமனை தகவல்…

சென்னை: நெஞ்சுவலி காரணமாக நடிகர் விக்ரம் சென்னையில் உள்ள பிரபலமான காவேரி மருத்துவமனையில் இன்று காலை அனுமதிக்கப்பட்ட நிலையில், அவரது உடல்நிலை குறித்து மருத்துவமனை நிர்வாகம் அறிக்கை வெளியிட்டு உள்ளது. அவருக்கு நெஞ்சுவலி இல்லை என தெரிவித்து உள்ளது.

நெஞ்சுவலி காரணமாக இன்று காலை சென்னையில் உள்ள காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நடிகர் விக்ரம் தொடர்பாக பல்வேறு தகவல்கள் சமுக வலைதளங்களில் பரவி வந்தன. இதையடுத்து, அவரது மேலாளர் சூரிய நாராயணன்,  நடிகர் விக்ரமுக்கு மாரடைப்பு கிடையாது, லேசான நெஞ்சுவலிதான் என்றும், அதனால்தான் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளர். நடிகர் விக்ரம் உடல்நிலை குறித்து வதந்திகளை பரப்புவது எங்களுக்கு வேதனை அளிக்கிறது. நடிகர் விக்ரம் தற்போது நலமுடன் இருக்கிறார். இன்று மாலை அல்லது நாளை காலை டிஸ்சார்ஜ் செய்யப்படுவார் என கூறியிருந்தார்.

இந்த நிலையில் காவேரி மருத்துவமனை விக்ரம் உடல்நிலை குறித்து அறிக்கை வெளியிட்டு உள்ளது. அதில், விக்ரம் நெச்சு அசவுகரியம் (நெஞ்சு எரிச்சல் போன்ற காரணங்கள்)  காரணமாக இன்று காலை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு அதுதொடர்பான மருத்துவ நிபுணர்கள் ஆய்வு செய்து சிகிச்சை அளித்தனர். அவருக்கு மாரடைப்பு ஏதும் இல்லை. தற்போது நலமுடன் இருக்கிறார். விரைவில் டிஸ்சார்ஜ் செய்யப்படுவார் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.