பேருந்து சக்கரத்துக்கடியில் ஸ்கூட்டியுடன் சிக்கிக்கொண்ட நபர்… கோர விபத்து

கேரள மாநிலம் ஆலத்தியூரில் சாலை வளைவில் கவனக்குறைவுடன் திரும்பிய பேருந்து, பக்கவாட்டில் இருந்த ஸ்கூட்டி மீது மோதி அதன் மீது ஏற இருந்த சூழலில், ஒருவர் துரிதமாக செயல்பட்டு ஸ்கூட்டி ஓட்டுநரை காப்பாற்றினார்.

மலப்புரம் – ஆலத்தியூர் சந்திப்பு பகுதியில் பேருந்து மோதியதில் சக்கரத்துக்கடியில் ஸ்கூட்டியுடன் நபர் சிக்கிக்கொண்ட நிலையில், அதனை பார்த்த ஒருவர் கூச்சலிட்டதோடு, பேருந்தை வேகமாக தட்டியும் நிற்கச்செய்தார்.

இதனால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது. இந்த காட்சிகள் சிசிடிவி கேமிராவில் பதிவாகி உள்ளன. 

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.