நாட்டின் பொருளாதாரம் குறித்து இலங்கை மத்திய வங்கி ஆளுநர்

அடுத்த சில மாதங்களில் இலங்கையின் பணவீக்கம் 70% ஆக உயரக்கூடும்.

நேற்று (07) இடம்பெற்ற விசேட ஊடகவியலாளர் சந்திப்பில் நாட்டின் தற்போதைய பொருளாதார நிலைமை குறித்து விளக்கமளிக்கும் போதே மத்திய வங்கியின் ஆளுநர் கலாநிதி நந்தலால் வீரசிங்க இதனைத் தெரிவித்தார்.

எவ்வாறாயினும், மத்திய வங்கியினால் நடைமுறைப்படுத்தப்பட்ட பொருளாதார ஸ்திரப்படுத்தல் நடவடிக்கைகள் காரணமாக, 2023 ஆம் ஆண்டின் ஆரம்பத்தில் இருந்து பணவீக்கம் வீழ்ச்சி அடையும் என்று  ஆளுநர் சுட்டிக்காட்டினார்.

இதற்கிடையில், 2022 ஜூன் மாத இறுதியில் இலங்கையின் மொத்த இருப்பு 1.9 பில்லியன் டொலர்களாக இருக்கும் என்றும் அவர் தெரிவித்தார்.

எவ்வாறாயினும், இந்த பணத்தில் 1.5 பில்லியன் டொலர்களுக்கு சமமான தொகை சீனாவால் பெறப்பட்ட பரிமாற்ற வசதியாகும். மேலும் அந்த பணத்தை இந்த நாட்டின் எந்த தேவைக்கும் பயன்படுத்த முடியாது. வங்கிகள் மற்றும் வங்கி அல்லாத நிதி நிறுவனங்களுக்கான விரிவான வழிகாட்டுதல்கள் மற்றும் கட்டமைப்புகள் எதிர்வரும் காலங்களில் வெளியிடப்படும் என்றும் அவர் மேலும் குறிப்பிட்டார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.