கொழும்பு கம்பஹா மாவட்டத்தின் பல பொலிஸ் பிரிவுகளில் இன்று இரவு 09 மணி முதல் மறு அறிவித்தல் வரை பொலிஸ் ஊரடங்கு

கொழும்பு மற்றும் கம்பஹா மாவட்டத்தின் பல பொலிஸ் பிரிவுகளில் இன்று (08) இரவு 09 மணி முதல் மறு அறிவித்தல் வரை பொலிஸ் ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்டுவதாக  பொலிஸ் மா அதிபர் சீ. டி. விக்கிரமரட்ன அறிவித்துள்ளார்.

இதுதொடர்பாக பொலிஸ் மா அதிபர்  விடுத்துள்ள அறிக்கையில்,

நீர்கொழும்பு பொலிஸ் பிரிவு
களனி பொலிஸ் பிரிவு
நுகேகொட பொலிஸ் பிரிவு
கல்கிசை பொலிஸ் பிரிவு
கொழும்பு (வடக்கு) பொலிஸ் பிரிவு
கொழும்பு (தெற்கு) பொலிஸ் பிரிவு
கொழும்பு (மத்திய) பொலிஸ் பிரிவு
ஆகிய பொலிஸ் பிரிவுகளில் இன்று இரவு 9 மணி முதல் மறுஅறிவித்தல் வரை பொலிஸ் ஊரடங்கு அமுல்படுத்தப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

மேற்படி பெலிஸ் பிரிவுகளிலுள்ள அனைவரும் தத்தமது வீடுகளிலேயே தங்கியிருப்பதுடன் ,பொலிஸ் ஊரடங்கை மீறுதல் பொது மக்களின் அமைதியை முன்னெடுப்பதில் தடையை ஏற்படுத்துவதாக கருதி  சட்டம் கடுமையாக நடைமுறைப்படுத்தப்படும் என்பதை அறிவிக்கின்றோம்.

இதேபோன்று ,பொலிஸ் ஊரடங்கு சட்டம் நடைமுறைப்படுத்தப்படும் பிரிவுகள் ஊடாக பயணிப்பது முழுமையாக தடைசெய்யப்படுவதுடன் ,இதற்காக மாற்று வழியை பயன்படுத்துமாறு பொலிஸ் மா அதிபர் கேட்டுக்கொள்வதாக அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.